Saturday 31 March 2018

யாம் எழுவோம்

யாம் எழுவோம்
எங்கள் பலவீனங்களிலிருந்து
தன்னலக் கண்ணிகளால் ஓயாது வீழும் சேற்றிலிருந்து
நம்பிக்கையின்மையின்மைகளிலிருந்து
அறியாமை அளிக்கும் நிரந்தரமான இருளிலிருந்து
எப்போதும் உடனிருக்கும் ஐயங்களிலிருந்து

உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்
வான் சுழலும்
கொற்றப்புள்
மர உச்சியில்
அமரும்
புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

யாம் எழுவோம்