Sunday 27 May 2018

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை
அமர்ந்திருந்தது
காலைப் பொழுதில்
நடை செல்பவர்களை
சுவாரசியமில்லாமல் பார்த்து
காகக் கரைதல்களைக் கேட்டபடி
தூக்க கலக்க முகத்துடன்
அவ்வப்போது கண் திறந்து
அவ்வப்போது கண் மூடி

இப்பக்கம் செல்லுமா
அப்பக்கம் செல்லுமா
என யோசித்து
நடந்து வந்தேன்

கணிப்புகளை பொய்யாக்கி
எப்பக்கமும்
போகாமல்
மதில் மேல் நடந்தது
மதில் மேல் பூனை