Wednesday 30 May 2018

கலங்கரை விளக்கமாய்
ஒளி வீசும்
உனது நெற்றி
அறிந்த தொலைவு
ஆசுவாசம் அளிக்கிறது
அலைகள் எழ விழ
ஒவ்வொரு முறை
புன்னகைக்கும் போதும்
உன் முகத்தில்
பூக்கிறது
ஒவ் ஒரு மலர்