Thursday 31 May 2018

ஈர நெஞ்சம்

விகிதாச்சாரத்தில்
இருள் கூடியும்
ஒளி குறைந்தும்
இருந்த
கோடைக் கால இரவில்
சன்னிதித் தெருவில்
நடந்து வந்து கொண்டிருந்தது
தென்றல்
எதிர்ப்பட்ட என்னை
கடந்து போயிற்று
அவசரமாய்
சந்திப்பின்
காணல்
மிக மெல்லிய ஈரமாய்
ஒட்டிக் கொண்டது உடலில்
கூடத்தில் சுவிட்ச் போட்டு
ஊருக்குப் போன குழந்தை
வீட்டுக்கு வரும் நாளை
காலண்டரில் பார்த்த போது
ஃபேன் காற்றில் படபடத்தன
காலண்டர் தாள்கள்