Thursday 28 June 2018

நீறு

ஓயாமல் எழுகிறது சிற்றலை
மகா நதியில்
கரை நோக்கி
ஓடக்காரன் பாடல் கேட்கிறது
எப்போதுமான காலத்தில்
பயணி அமர்ந்திருக்கிறான்
காலப்பெருக்கில்
அலையும் ஓடத்தில்
மயானக் கரையின் புகை
மேலே சென்று கொண்டிருக்கிறது
நெளிந்த மனம்
விடுபடும் கணத்தில்
எஞ்சியிருக்கிறது
தணல் உதிர்த்த சாம்பல்
பூசகன் அள்ளிச் செல்லும்
கலத்தில்
சிரிக்கிறது
அறிதலின் மகரந்தம்