Tuesday 17 July 2018

கொடை

கணப்பொழுதில்
ஒளிரும்
உன் முகத்தின்
ஒரு துளியை
மொக்குகளிடம்
தந்தேன்
நிலமெங்கும்
மலர்ந்தன மலர்கள்

உன் புன்னகையின்
சிறு ஒளியை
பெற்றுக் கொண்டன
ஆழ்கடலின் முத்துக்கள்

இறுதி
உயிர் திரட்டி
வானம் பார்த்திருந்த
பாலைப் பயிருக்கு
உன் கருணை
ஒரு துளி மழையாய்
பெய்தது