Wednesday 10 October 2018

என் அவமதிப்புகளுக்காக
என்னால் ஏற்பட்ட
ஆறா ரணங்களுக்காக
என் இன்னாத சொற்களுக்காக
நான் உண்டாக்கிய
தீரா வலிகளுக்காக

இன்று
இப்பொழுதில்

உங்களிடம்
மன்னிக்கக் கோருகிறேன்
மீண்டும் மீண்டும்
மன்னிக்கக் கோருகிறேன்

என் விழிகளிலிருந்து
வீழும்
நீர்த்துளிகள்
மணல்துகள்களாய்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
முடிவற்ற கடலை