Saturday 6 October 2018

எப்போதாவது
சிலிர்க்க வைக்கிறது
நம் மீது காட்டப்படும் அக்கறைகள்

என்றோ ஒரு நாள்
திகைத்து நிற்கிறோம்
நம் முன்னே
விரிந்து கிடக்கும்
இனிமையின் பெரும்பரப்பின் முன்

வீழும் துளிநீர்
இல்லாமலாக்கி விடுகிறது
உடனிருக்கும்
பெருஞ்சுமைகளை

நம்பிக்கைகள்
நிறையும்
நாட்கள்
நதிபோல
நடந்து கொண்டுதான் இருக்கின்றன