Friday 2 November 2018

உக்கிரத் தனிமையில் நிற்கும்
புராதன
ஆலய மண்சுவர்
பருவமழை

எப்போதும்
யார் யாரோ
திரியும்
வீதிகள்
தூய்மை செய்து கொள்கின்றன
ஆசுவாசமாய்

துல்லிய ஒலி கொண்ட
மாலையில்
கனமாக
அமர்கிறது
கருமேக இரவு

பின்னர்
நீண்ட
தவளைகளின்
பிராத்தனை
நேரம்