Friday 30 November 2018

இந்த மாநகரம்

ஓயாமல் ஓடும் பாதைகள்
கொண்ட
இந்த மாநகரம்

வாங்குவதும்
விற்பதும்
எங்கும்
நிறைந்திருக்கும்
இந்த மாநகரம்

உருவாக்கி
வாரி இறைக்கப்படும் ஒளி
காட்சியாய்
படமாய்
வாசகமாய்
ஜொலிக்கும்
இந்த மாநகரம்

மனிதர்களை
நகர்த்திக் கொண்டே இருக்கும்
இந்த மாநகரம்

ஏதோ ஒரு கணத்தில்
எந்த வாய்ப்பும் கண்ணுக்குத் தெரியாத
யாரோ சில மனிதர்களின்
விழிகளில் திரளும்
கண்ணீரை
எங்கே வைப்பது எனத் தெரியாமல்
வெண்மேகங்களில்
வைத்து விடுகிறது

கருமேகங்கள்
நகரைச் சூழும்
நாளில்
இந்த மாநகரம்
கண்ணீரால் நனைகிறது