Thursday 3 January 2019

சூஃபி

மண்ணில் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
ஓர் அற்புதக் கணத்தில்
பேதம் உணராதிருந்த போது
உனது எரியும் நினைவுகள்
பனிமலையாய் உருகிக் கொண்டிருந்தன
நீரெனக் கனிந்து
ஒவ்வொரு கணமும்
நீ
மலரத் துவங்கினாய்
உன் நிலத்தில்
அரற்றும் அழுகுரல்கள் கேட்கின்றன
துயரின் கண்ணீர் சமர்ப்பணமாகிறது
வலியின் வேதனை முனகல்கள் எழுகின்றன
நம்பிக்கை கோரும் பிராத்தனைகள்
உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
நீ ஆற்றுப்படுத்தும் போது
நீண்ட பாலைகளின் காற்றில்
சிறுதுளியாய்
ரோஜா மணம் வீசுகிறது
அதில் கரைகிறது
மானுடப் பெருவெளி