Thursday 3 January 2019

எம் பாவாய்

உன் பார்வை
கருணை
என நான் அர்த்தப்படுத்தியிருந்தவற்றில்
மேலும் சிலவற்றை
சேர்த்தது
சிலவற்றை
முற்றிலும் மாற்றியமைத்தது

சீரான
உன் மூச்சில்
எப்போதாவது
உன் தோள்கள்
இலேசாக
அசையும் போது
ததும்பும்
அமுத கலசத்தின்
ஒரு சித்திரத்தை
மனம்
தீட்டிக் கொள்கிறது

புன்னகைக்கும்
உன் முகம் காட்டும்
உணர்வுகளில்
விதவிதமாய் பிறக்கின்றன
புதிய பிரபஞ்சங்கள்

உன்
சொல் தீ யில்
சாம்பலாகிறது
நான்
என்னும்
பாரம்