Friday 4 January 2019

அப்பால்

மலைகளில் உறைந்திருக்கும் அமைதியைப் போல்
கிராமத்துச் சாலைகளின் தனிமையைப் போல்
துடிப்பான சிறுவனின் உற்சாகமான சிரிப்பைப் போல்
குளக்கரை மலர்களின் தனித்துவம் போல்
சிற்கு விரித்து எழும் பறவைகள்
வானில் உணரும் சுதந்திரம் போல்
ஒரு வீட்டுப் பிராணியின் ஆசுவாசம் போல்
இருளில் சுடரும் ஓர் அகல் தீபத்தின் எளிமையைப் போல்
கார் மேகத்தின் கருணையைப் போல்
நிலவின் வடிவைப் போல்

உன்னை
எப்படியாவது
வகுத்து விட முடியுமா
என யோசித்துப் பார்க்கிறேன்

கரையில்
அலை தீண்டிய
பரப்புக்கு
அப்பால்
மணலில்
மிதந்து கொண்டிருந்தது
அலை நுரை