என் கவசங்கள் கனக்கின்றன
நழுவி வீழ்கின்றன
கரங்கள் ஏந்தியிருக்கும் படைக்கலன்கள்
பாதங்களில் படியும் இரத்தச் சேறுடன்
நிலத்தில் நடக்கிறேன்
எக் கோணத்திலும் அன்னியமாய் பூங்காவின்
நீர்ச்சுனையில்
மூழ்கி எழுகிறேன்
கிளையிலிருந்து மண்ணுக்குப் பறக்கும்
மரமல்லிகளைக் கடந்து
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உன் முன் வரும் நேரம்
தொலைவில் அதிரும் மணி
ஓசையாய் நிறைகிறது
எங்கும்
நழுவி வீழ்கின்றன
கரங்கள் ஏந்தியிருக்கும் படைக்கலன்கள்
பாதங்களில் படியும் இரத்தச் சேறுடன்
நிலத்தில் நடக்கிறேன்
எக் கோணத்திலும் அன்னியமாய் பூங்காவின்
நீர்ச்சுனையில்
மூழ்கி எழுகிறேன்
கிளையிலிருந்து மண்ணுக்குப் பறக்கும்
மரமல்லிகளைக் கடந்து
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உன் முன் வரும் நேரம்
தொலைவில் அதிரும் மணி
ஓசையாய் நிறைகிறது
எங்கும்