Wednesday 30 January 2019

என் கவசங்கள் கனக்கின்றன
நழுவி வீழ்கின்றன
கரங்கள் ஏந்தியிருக்கும் படைக்கலன்கள்
பாதங்களில் படியும் இரத்தச் சேறுடன்
நிலத்தில் நடக்கிறேன்
எக் கோணத்திலும் அன்னியமாய் பூங்காவின்
நீர்ச்சுனையில்
மூழ்கி எழுகிறேன்
கிளையிலிருந்து மண்ணுக்குப் பறக்கும்
மரமல்லிகளைக் கடந்து
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உன் முன் வரும் நேரம்
தொலைவில் அதிரும் மணி
ஓசையாய் நிறைகிறது
எங்கும்