உன் முகம் வாடும்
தருணங்களிளெல்லாம்
பெருஞ்சுமையால்
மூச்சிறைக்கிறேன்
உன் விழியில் திரளும்
துயரின்
ஒரு துளி கண்ணீர்
ஓயாத பேரலைகளாக
ஓசையிடுகின்றன
உன் தனிமை
பாலை நிலத்தின்
பெருங்காற்றாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறது
தருணங்களிளெல்லாம்
பெருஞ்சுமையால்
மூச்சிறைக்கிறேன்
உன் விழியில் திரளும்
துயரின்
ஒரு துளி கண்ணீர்
ஓயாத பேரலைகளாக
ஓசையிடுகின்றன
உன் தனிமை
பாலை நிலத்தின்
பெருங்காற்றாய்
நகர்ந்து கொண்டேயிருக்கிறது