Tuesday 19 February 2019

கிருஷ்ண முரளி - 5

குளிர் இளம் நதி ஓடிக்கொண்டிருக்கிறது
தென்றல் உலவும் படித்துறையில்
நின்றிருக்கிறாள்
பூத்த மரம் போன்ற பாவை
என்றோ ஒலித்த
புல்லாங்குழல்
அவள் அகத்தில்
கேட்டுக் கொண்டிருக்கிறது
முதல் முடிவு அற்ற
பொழுதில்
இன்னும் சொல்லாக்காத உணர்வுடன்
காத்துக் கொண்டிருக்கிறாள்