Tuesday 5 February 2019

உன் ஞாபகம் வருவதுண்டு

உன் ஞாபகம் வருவதுண்டு
தவிட்டுக் குருவி ரியர் வியூ ஆடியை கொத்திக் கொண்டிருக்கும் போது
பகலில் அணிலின் கிரீச்சிடல் கூடத்தில் கேட்கும் போது
குழந்தைகள் பள்ளிப் பேருந்துக்கு காத்து நிற்கையில்
மழை ஓயாமல் பெய்யும் போது
அதிகாலைப் பனியில் நடந்து செல்லும் போது
உதயத்தின் ஒளி காணும் போது
தற்செயலாக வான் பார்க்கும் போது
மாடியில் நட்சத்திரங்களுக்குக் கீழே இருக்கும் போது
தென்றல் வீசிச் செல்லும் போது
பெருங்கடல் முன் நிற்கும் போது
ஆற்றில் மூழ்கி எழும் போது

உன் ஞாபகம்
உன் ஞாபகம் வருவதுண்டு