Tuesday 5 February 2019

கிருஷ்ண முரளி - 4

இந்த ஆற்றின் கரையில்
படித்துறையில்
நதி ஈரம் நிரம்பிய மென்காற்றில்
புனல்
சுழித்துப் புன்னகைக்கையில்
உன் மலர்ச்சிரிப்பை
நினைக்கிறேன்
தூய அச்சிரிப்பின் ஒளியில்
என் அகத்தை வைக்கிறேன்
உன் இதழ் அறியும்
மூங்கில் இசை
காற்றில் கரைவது போல்
இக்கணத்தில்
நிறைந்து
இல்லாமல் ஆகிறேன்