Wednesday 24 April 2019

வண்ண மலர்

காலைப்பனி நீங்கும் காட்டில்
நிறைகிறது
ஆழ்மௌனம்
முதுகெலும்பென நீண்டிருக்கும்
மரங்கள்
நிழல்களின் சாலையில்
நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
பயணம்
நீ எங்கோ
உறைந்திருக்கிறாய்
சிறுசுனையின் மலர்
கொள்ளும்
வண்ணம்