தணிந்த
சிதை நெருப்பின்
சாம்பல் குவியலின்
வெண்ணிறப் பொடி
மானசீகமாக
உரு தருகிறது
இல்லாத உடலுக்கு
இறுதி யாத்திரைக்குப் பின்
இன்னும் ஒரு வாய்ப்பளித்து
சமுத்திரம் வரை செல்கிறது
முற்றிலும் கரைந்து போக
முற்றிலும் கரைதலில்
ஒரு ஆசுவாசம்
இருக்கத்தானே செய்கிறது
சிதை நெருப்பின்
சாம்பல் குவியலின்
வெண்ணிறப் பொடி
மானசீகமாக
உரு தருகிறது
இல்லாத உடலுக்கு
இறுதி யாத்திரைக்குப் பின்
இன்னும் ஒரு வாய்ப்பளித்து
சமுத்திரம் வரை செல்கிறது
முற்றிலும் கரைந்து போக
முற்றிலும் கரைதலில்
ஒரு ஆசுவாசம்
இருக்கத்தானே செய்கிறது