Friday 5 April 2019

இறுதிக்குப் பின் யாத்திரை

தணிந்த
சிதை நெருப்பின்
சாம்பல் குவியலின்
வெண்ணிறப்  பொடி
மானசீகமாக
உரு தருகிறது
இல்லாத உடலுக்கு

இறுதி யாத்திரைக்குப் பின்
இன்னும் ஒரு வாய்ப்பளித்து
சமுத்திரம் வரை செல்கிறது
முற்றிலும் கரைந்து போக

முற்றிலும் கரைதலில்
ஒரு ஆசுவாசம்
இருக்கத்தானே செய்கிறது