Friday 3 May 2019

உன்னிடமிருந்து

உன்னிடமிருந்து
எவ்வளவோ பெற்றுக் கொண்டேன்
ஒரு விஷயத்தை
மேன்மையாகப் புரிந்து கொள்ளும்
வழிமுறைகள் மட்டுமே
உன்னிடம் இருந்தன
யாருடைய துக்கத்துக்காகவும்
நீ துயரப்பட்டாய்
பிறருக்காக சிந்துவதற்கு
எப்போதும்
உன்னிடம் கண்ணீர் இருந்தது
பிழைகளைத்
தவறுகளை
இயல்பாக மன்னித்தாய்
நீ நினைக்கப்படும் போதெல்லாம்
அங்கே நிறைகிறது
உன் நேசத்தின் நறுமணங்கள்
உன் அகம்
அன்பால்
ஒட்டுமொத்தமாக
இந்த உலகை
ஒரு குழந்தையாக
மாற்றுகிறது

வான் தெய்வங்களின்
நிஷ்டையை
அவ்வப்போது
கலைத்தது
புவியில்
உன் இருப்பு
...