Sunday 16 June 2019

ஏந்துதல்

உன் பிரியங்களை எப்போதும் மறக்க மாட்டேன்
விடைபெறும் போது சொன்னாய்

உனது பிரியங்கள்
நீ இல்லாத போதும்
நிலத்தில் புல்லென
பரவிக் கொண்டேயிருக்கின்றன

அதிகாலைப் பனியை
துளித்துளி நீராய்
உள்ளங்கைகளிளென
ஏந்தும்
பசும்புல்லாய்