மர்ஃபி கல்யானையைக் கண்டான்
அதன் சின்ன கண்கள்
காதுகள்
துதிக்கை
யானையை நெருங்கிப் பார்க்க நினைக்கும்
இயல்பான அவன் ஆர்வமும்
அக்கணம் உண்டாகும் தயக்கமும்
அப்போதும் இருந்தன
மெல்ல சென்று
தொட்டுப் பார்த்தான்
சுற்றி வந்தான்
கல்யானையை யானையாக்குவது குறித்து
மர்ஃபி கற்பனை செய்வதை
கல்லை யானையாக்கியவன்
பார்த்துக் கொண்டிருந்தான்