Wednesday 3 July 2019

எவ்வளவு அற்புதம்

ஒரு பெருவெள்ளம் ஓய்ந்ததற்குப் பின்னால்
நதியின் கரைகளில் நிறைந்திருக்கிறது
புது சேற்றின் தடங்கள்
அடித்து வரப்பட்ட தாவர தழை இலைகள்
பின் மாலையின் இருளில்
சூரியத் தடங்கள் முற்றாய் மறைந்திருக்கின்றன
ஓயாமல் பெய்த மழை
தூய்மையாக்கிய காற்றில்
புதுப்பிறப்பு கொண்டுள்ளது
நாம் காணும் காட்சிகள்
எல்லா இனிமைகளும் நிறைந்த
ஒரு புதிய தினம்
தினம் தினம்
உதிக்கிறது
என்பது
எவ்வளவு மகிழ்ச்சியானது
எவ்வளவு அற்புதமானது