உனது விரல்கள் மெல்லியவை
உனது கரங்கள் மென்மையானவை
ஏந்தும் போது அறிந்திருக்கிறேன்
உன் குரலில்
எப்போதும் நிரம்பியிருக்கின்றன
மாசின்மையும் உவகையும்
உணர்வுகளின் பெருக்கால்
அலை மோதும் போது
நீர்த்திரை கொண்டன
உனது கண்கள்
நீ
கடந்து சென்ற பிரதேசங்கள்
இன்னும் மறக்காமல் இருக்கின்றன
உனது இருப்பின் இனிமையை
காத்திருப்பவன்
நின்று கொண்டிருக்கிறான்
அகழ்வாரைத் தாங்கும் நிலத்தில்
உனது கரங்கள் மென்மையானவை
ஏந்தும் போது அறிந்திருக்கிறேன்
உன் குரலில்
எப்போதும் நிரம்பியிருக்கின்றன
மாசின்மையும் உவகையும்
உணர்வுகளின் பெருக்கால்
அலை மோதும் போது
நீர்த்திரை கொண்டன
உனது கண்கள்
நீ
கடந்து சென்ற பிரதேசங்கள்
இன்னும் மறக்காமல் இருக்கின்றன
உனது இருப்பின் இனிமையை
காத்திருப்பவன்
நின்று கொண்டிருக்கிறான்
அகழ்வாரைத் தாங்கும் நிலத்தில்