Saturday 27 July 2019

உனது விரல்கள் மெல்லியவை
உனது கரங்கள் மென்மையானவை
ஏந்தும் போது அறிந்திருக்கிறேன்
உன் குரலில்
எப்போதும் நிரம்பியிருக்கின்றன
மாசின்மையும் உவகையும்
உணர்வுகளின் பெருக்கால்
அலை மோதும் போது
நீர்த்திரை கொண்டன
உனது கண்கள்
நீ
கடந்து சென்ற பிரதேசங்கள்
இன்னும் மறக்காமல் இருக்கின்றன
உனது இருப்பின் இனிமையை
காத்திருப்பவன்
நின்று கொண்டிருக்கிறான்
அகழ்வாரைத் தாங்கும் நிலத்தில்