Friday 19 June 2020

அகமலர்

அனாதையாக ஒரு நெடுஞ்சாலை
மாலைப்பொழுதில் வந்து சேர்கிறான்
எங்கு செல்வதென அறியாத ஒருவன்
சாலைகளின் முடிவின்மை
ஒரு கணம்
மலைக்க வைக்கிறது
எதிர்பாராமல் வீசும் மென்காற்றில்
இயல்பாக மலர்கிறது
ஒரு மலர்