Thursday 25 June 2020

தவிப்பு

திரிந்து
ஒற்றை மலருடன்
திரும்பி வருகையில்
பாதையின் முட்களை
சந்திக்கின்றன
பாதங்கள்
துயரின் சுவடு
மலரில் படியலாகாதென
பிராத்திக்கிறான்
பயணி
அந்தி மலர்ந்திருக்கும் பொழுதில்
இலைகள்
ஓயாமல் தவமியற்றும்
பெருமரத்தின் அடியில்
ஏற்றப்பட்டிருக்கிறது
உன்னுடைய சிற்றகல்
சுடரலைவு ஏன் அத்தனை தவிப்பை உண்டாக்குகிறது