திரிந்து
ஒற்றை மலருடன்
திரும்பி வருகையில்
பாதையின் முட்களை
சந்திக்கின்றன
பாதங்கள்
துயரின் சுவடு
மலரில் படியலாகாதென
பிராத்திக்கிறான்
பயணி
அந்தி மலர்ந்திருக்கும் பொழுதில்
இலைகள்
ஓயாமல் தவமியற்றும்
பெருமரத்தின் அடியில்
ஏற்றப்பட்டிருக்கிறது
உன்னுடைய சிற்றகல்
சுடரலைவு ஏன் அத்தனை தவிப்பை உண்டாக்குகிறது
ஒற்றை மலருடன்
திரும்பி வருகையில்
பாதையின் முட்களை
சந்திக்கின்றன
பாதங்கள்
துயரின் சுவடு
மலரில் படியலாகாதென
பிராத்திக்கிறான்
பயணி
அந்தி மலர்ந்திருக்கும் பொழுதில்
இலைகள்
ஓயாமல் தவமியற்றும்
பெருமரத்தின் அடியில்
ஏற்றப்பட்டிருக்கிறது
உன்னுடைய சிற்றகல்
சுடரலைவு ஏன் அத்தனை தவிப்பை உண்டாக்குகிறது