ஒளிர் கதிர் காலையை
குருதியெனப் பரந்து நிறையும் நிமிடங்களை
வைர கணங்களை
தாமரை
இலை மேலான
ஒரு துளியை
ஒரே
ஒரு துளியை
இலையின் கீழ் உறையும்
ஒரே
ஒரு
பெருந்துளியை
சிட்டுக்குருவி ஒன்றின் பாய்ச்சல்களை
ஒரு
மலர்ச் சிரிப்பை
தாகம் தீர்க்கும்
கையளவு
நீரை
இவ்வளவுதான் வாழ்க்கை
என
உன்னிடம்
ஒப்படைத்து விடுகிறேன்
வேறென்ன