Sunday 1 November 2020

துணை

 உடன் இருக்கிறாய்
கேட்டுக் கொள்கிறாய்
விவாதிக்கிறாய்
ஆறுதல் சொல்கிறாய்
நம்பிக்கை அளிக்கிறாய்
பிராத்திக்கிறாய்
ஓயாமல் மன்னிக்கிறாய்

உனக்கு என்ன கொடுத்தேன்
யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்

சிரித்துக் கொண்டே
பெறுவது ஆனந்தம்
கொடுப்பது பேரானந்தம்
என்கிறாய்