Friday 20 November 2020

உன்னைப் பற்றி

உன்னைப் பற்றி
சொல்லும் போது
உனது மாசின்மையைச் சொல்கிறேன்
ஒளியாய் நிறையும்
உனது இயல்பைச் சொல்கிறேன்
உன் அகம் மலர்ந்த புன்னகையைச் சொல்கிறேன்
எவருடனும் பேசும் உன் சொற்களின் இனிமையைச் சொல்கிறேன்
நீ இருக்குமிடத்தில்
பரவும் அமைதியைச் சொல்கிறேன்
உனக்கு மட்டும் தெரிந்த
உன் துயரத்தின்
ஒரு துளி கண்ணீர் குறித்து
நான் 
ஏதும் சொல்லாமல்
மௌனமாய் இருக்கிறேன்