உன்னைப் பற்றி
சொல்லும் போது
உனது மாசின்மையைச் சொல்கிறேன்
ஒளியாய் நிறையும்
உனது இயல்பைச் சொல்கிறேன்
உன் அகம் மலர்ந்த புன்னகையைச் சொல்கிறேன்
எவருடனும் பேசும் உன் சொற்களின் இனிமையைச் சொல்கிறேன்
நீ இருக்குமிடத்தில்
பரவும் அமைதியைச் சொல்கிறேன்
உனக்கு மட்டும் தெரிந்த
உன் துயரத்தின்
ஒரு துளி கண்ணீர் குறித்து
நான்
ஏதும் சொல்லாமல்
மௌனமாய் இருக்கிறேன்