Wednesday 8 June 2022

ஊற்று

இன்று காலையிலிருந்து ஏகப்பட்ட பணிகள். மனம் முழுவதும் லௌகிக விஷயங்களே நிரம்பியிருந்தது. ஒன்றை அடுத்து இன்னொன்று என வேலைகள். பல விதமான பணிகளில் ஈடுபடுவதால் தகவல்களும் குறிப்புகளும் வந்து குவிந்து கொண்டு இருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல நடக்க வேண்டும். இத்தனை பணிகளுக்கு இடையிலும் இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். என்னுடைய பாணியிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு சிறுகதை. எழுதத் தொடங்கினால் தொடர்ச்சியாக எழுதுவது எனது எழுத்துமுறை. அவ்வாறே எழுதி முடித்தேன். படைப்பூக்கம் என்பது ஒரு ஊற்று என மீண்டும் ஒருமுறை உணர்ந்தேன்.