கடும் உடல் உழைப்பை நல்கக் கூடியவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு அதிகம் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே. குறைவான உடல் உழைப்பை அளிக்கக்க்கூடியவர்களும் அதிக உணவை உண்ணக் கூடிய பழக்கம் இருக்கிறது. அவர்கள் சகஜமான சுமுகமான உடல் இயக்கத்துக்கு ஒருவேளை உணவருந்தினால் போதுமானது. எனினும் மனிதர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்னும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். மேலும் அந்த மூன்று வேளை உணவுக்கான செல்வத்தை ஈட்ட வாழ்நாள் முழுதும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.