Tuesday, 7 July 2020

எனது படைப்புகள்

2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்

லீலாவதி


புள்ளரையன் கோவில்


ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


காத்திருப்பு


நாகரிகம்


துவக்கம்


வசந்த மண்டபம்


விடை


இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1

யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3

யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்


வேங்கடத்துக்கு அப்பால்


நமது ஊற்றுக்கள்


கண்ணீரும் வாழ்வும்


வீரப்ப வேட்டை


கிருஷ்ணப்பருந்து


நீரெனில் கடல்


அந்தரப்பந்துகளின் உலகு


உற்சாகமான பார்வையாளன்


சுழித்து நுரைக்கும் வாழ்க்கை


பங்கர் ராய் - வெறும் பாதக் கல்லூரி


காவேரி - வெள்ளமும் வறட்சியும்


கெடிலக்கரை நாகரிகம்


படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு


அஞ்சலி : செழியன்


 சித்தாந்தத்தால் மனம் நிரம்பியிருக்கும் நண்பனுக்கு


ஜனனி


மறைந்த தோழன்


சொன்னால் வெட்கப்பட வேண்டும்


காத்தல்

சொல்வனம் இதழில் வெளியான எனது கட்டுரைகளின் இணைப்பு :

யாமறிந்த புலவரிலே

புனைதலும் கலைதலும்

இறுதி அஞ்சலி : ஆ ப ஜெ அப்துல் கலாம்

*

Monday, 6 July 2020

விடிகாலை சூரியன்
மாலைத் திங்கள்
அகல் விளக்கின் சிறு தீபம்
தீ பூக்கும் மண்ணில்
அடிபணியும் உயிர்
வான் நோக்கிப் புன்னகைக்கும்
தடாக மலர்கள்
விடுதலைப் பயணம்

Saturday, 4 July 2020

உலகின் ஆசிரியன்

கிராமத்தில் பணி புரியும் தோறும் நாளும் தேசம் பற்றிய சித்திரம் இன்னும் நுட்பமானதாகக் காணக் கிடைக்கிறது. இந்தியாவை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பணி எனக்கு உதவியிருக்கிறது. இருபத்து ஓராம் நூற்றாண்டில், போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒரு காலகட்டத்தில் நான் ஒரு கிராமத்தில் பணி புரிகிறேன். அங்கே செல்லும் போது எனக்கு அங்கே யாரையும் முன் அறிமுகம் கிடையாது. அந்த கிராமத்துக்குச் செல்வது அதுவே முதல் முறை. என் முன்னெடுப்பில் அவர்கள் பங்கெடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை எப்படி உருவானது? ‘’அதிதி தேவோ பவ’’ என்பது இந்தியர்களின் அகத்தில் ஆழமாகப் பதிந்த ஒன்று. அந்த மதிப்பீடு ஐயாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் அகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழ்நாட்டில், தெலங்கானாவில், குஜராத்தில், ஹரியாணாவில், உத்தரகண்டில் என எங்கு சென்றாலும் விருந்தினனுக்கு எளிய மக்கள் வரவேற்பையே அளிப்பார்கள். எனக்கு அளித்தார்கள். அது என் அனுபவம். 

இந்தியர்கள் ஒரே கடவுளை வணங்குபவர்கள் அல்ல. ஐந்து பேர் இருக்கும் ஒரு வீட்டில் தந்தை சிவனை வணங்குவார். அன்னை ராமனை வணங்குவார். மூத்த பிள்ளை முருகனை வணங்குவான். இளைய பிள்ளை விநாயகரைத் தினமும் கும்பிடுவான். அந்த வீட்டின் பெண் தினமும் திருப்பாவை பாடி திருமாலைத் துதிப்பாள். வருடத்துக்கு ஒருமுறை அந்த வீட்டில் உள்ள அனைவருமே குடும்பமாக திருமலை சென்று வருவார்கள். உலகம் அடைய வேண்டிய இந்த லட்சிய நிலையை பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் இயல்பான பழக்கமாகவே கொண்டுள்ளது. 

குடும்ப அமைப்பு என்பதும் அதன் உறுப்பினர்கள் மீது குடும்பம் எடுத்துக் கொள்ளும் பொறுப்பும் அக்கறையும் என்பதும் இந்தியாவுக்கே உரிய தனிச்சிறப்பு. உலகின் பெரும்பாலான நாடுகள் தனது பிரஜைகளின் மருத்துவச் செலவை பராமரிப்புச் செலவை அரசாங்கங்களே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இங்கே உள்ள  குடும்ப முறையை மற்ற நாடுகள் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய காலகட்டம் உலகிற்கு இப்போது உருவாகியுள்ளது. 

ஒவ்வொரு இந்திய கிராமத்திற்கும் மானுடத்துக்கான மேலான மதிப்பீடுகளை அறுவுறுத்தியவர்களின் சொற்கள் சென்றடைந்த வண்ணமே உள்ளன. பகவத்கீதையை அருளியவனின் சொற்கள். அருள் பொங்கிய பகவான் புத்தரின் சொற்கள். அஹிம்சையை விரதமாகக் கொண்டனே மாவீரன் என்ற உண்மையை உரைத்த பகவான் மகாவீரரின் சொற்கள். ‘நீயும் இறையும் இரண்டல்ல’ என்ற ஆதி சங்கரின் சொற்கள். மானுட சமத்துவத்தைக் கனவு கண்ட ராமானுஜரின் சொற்கள். ‘’இந்தியாவை மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகையுமே நாம் எழுப்பியாக வேண்டியிருக்கிறது’’ என அறைகூவிய சுவாமி விவேகானந்தரின் சொற்கள். ’’நம் கண்ணியமான செயல்கள் மூலம் இந்த உலகத்தை அதிரச் செய்ய முடியும்’’ என்ற மகாத்மாவின் சொற்கள். 

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்!
ஆம்! இந்தியா உலகிற்கு அளிக்கும்!
-பாரதி

Friday, 3 July 2020

ஒளிரும் நிலவு
பாதை காட்டும் ஒளி, உலகினுக்கு
வெற்றிடம் நிரப்பும் மிளிர்வு
பனி மூடியிருக்கையில் புன்னகைக்கிறது
சிலர் நினைக்கிறார்கள்
அது வளர்வதாக
தேய்வதாக
என் நிலவுக்கு
இரவும் பகலும் இல்லை
முத்தென ஒளி வீசுகிறது
எப்போதும்

-ஒரு ஜென் கவிதை

Thursday, 2 July 2020

சாம்

மர்ஃபி வீட்டில் இருக்கிறான். அவனுடைய அம்மாவிடமும் அப்பாவிடமும் மன்றாடி ஒரு குட்டி நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து விட்டான். அதற்குப் பெயரிட வேண்டும். ஒரு வாரம் பல பெயர்களைப் பரிசீலித்தான். இந்த உலகில் அது அவனுக்கு முற்றும் சொந்தமானது. அதன் எல்லா பொறுப்புகளும் அவனையே சாரும். வானின் கடவுள் சாம் எவ்வாறு மர்ஃபியால் கவனித்துக் கொள்ளப்படுகிறான் என்பதை தினமும் கண்காணிக்கிறார். கடவுளிடம் நன்மதிப்பைப் பெற வேண்டுமே! மர்ஃபி அயராமல் அதன் பின் சுற்றினான். காலையில் பசும்பால் காய்ச்சி உணவிடுவது. பிஸ்கட் போடுவது. சோறூட்டுவது. எல்லாருக்கும் சாமை அறிமுகம் செய்து வைப்பது. மர்ஃபியின் உலகம் சாமால் நிறைந்திருக்கிறது. 

சாமின் அம்மாவும் சகோதரர்களும் சாமிடம் வர முயல்வதுண்டு. மர்ஃபி அவர்களை அனுமதிப்பதில்லை. சாம் மனித வாசனையால் நிரம்பத் துவங்கியதும் அவன் குடும்பத்தினர் அவனிடமிருந்து விலகினர். வேறு என எண்ணத் துவங்கினர். 

‘’மாமா! இப்பல்லாம் ஏன் மாமா அதெல்லாம் வந்து சாமை பாக்கறதில்ல?’’

‘’மர்ஃபி! நீ எப்போதும் தூக்கிட்டு அலையறதால சாமோட உடம்புல உன் வாசனை அதிகமா இருக்கு. அதனால சாமை அது வேறன்னு நினைக்கும்.’’

‘’மாமா! அப்ப என் ஒடம்புல சாம் வாசனை இருக்குமே? அப்புறம் ஏன் என்னைப் பார்த்தாலும் ஓடுது?’’

‘’நல்ல கேள்வி மர்ஃபி!’’

சாம் இப்போது எனக்கும் நண்பனாகி விட்டது. நீளமான வாலை விதவிதமாக ஆட்டிக் கொண்டேயிருக்கிறது. வாஞ்சையாக எப்போதும் பார்க்கிறது. எங்கே கிளம்பினாலும் தன்னையும் உடன் அழைத்துச் சென்றால் என்ன என்பது போல் பார்க்கிறது. அடிக்கடி வெளியே போகிறானே என்ன செய்து கொண்டிருக்கிறான் என கண்காணிக்கிறது. அவ்வப்போது குழந்தை போல் படுத்து உறங்குகிறது. என்னை விட என் தந்தையிடம் மேலும் நெருக்கம். பிஸ்கட் போட்டால் வான் நோக்கி எம்பி விளையாடும். 

காலையில் கார் துடைத்துக் கொண்டிருந்தேன். நான் செய்வதைப் பார்த்துக் கொண்டு உடனிருந்தது. 

அம்மாவிடம் கேட்டேன்.

‘’அம்மா! சாம் நம்ம வீட்ல இருக்கட்டும்மா’’

‘’மர்ஃபி ஊருக்குப் போனதும் இங்க தான இருக்கப் போகுது?’’

‘’அப்ப இருக்கறது இப்பவே இருக்கலாம்ல’’

‘’மர்ஃபி ஒத்துக்க மாட்டான்’’

சில நாட்களுக்கு முன்னால் ரூமியின் கவிதை ஒன்றை எனது நண்பன் எனக்கு அனுப்பியிருந்தான். 

காதல் நாய்கள்
---------------------------

நடுநிசியில் ஒருவன்
இறைஞ்சிய வண்ணமிருந்தான்
‘’இறைவா! இறைவா!’’
அப்போற்றுதலில்
அவனது உதடுகள்
கனிந்து போயின

அவநம்பிக்கைவாதி ஒருவன்
அப்போது கேட்டான்
‘நீ இறைஞ்சுவதைக்
கேட்க நேரிட்டது.
அதற்கு எப்போதேனும்
பதில் கிடைத்ததா உனக்கு?’’

இதைக் கேட்டவுடன்
அவனால் விடையளிக்க முடியவில்லை
வழிபடுவதை விடுத்து
குழம்பியவாறு துயிலில் ஆழ்ந்தான்

ஆன்மாக்களின் வழிகாட்டி
ஒருவனை
அடர்ந்த பசும்காட்டில்
தான் காண்பது போல்
கனவு கண்டான்

‘போற்றுவதை ஏன்
நிறுத்தி விட்டாய் நீ?’

‘ஏனெனில் பதிலேதும் கிடைக்கவில்லை எனக்கு’

‘நீ வெளிப்படுத்தும் இவ்வேட்கையே
உனக்குக் கிடைத்த பதில்’

உன்னை மன்றாடச் செய்த துக்கமே
உன்னை இட்டுச்செல்லும்
சங்கமத்திற்கு.

உதவி கோரும்
மாசற்ற உனது துயரமே
அந்த ரகசியக் கோப்பை.

தன்னைப் பேணிக்காப்பவனுக்காக
தவித்து முனகும்
நாயைக் கவனித்துள்ளாயா?
அந்த முனகலே
உயிர்ப்புள்ள இணைப்பாகும்.

எவரும் பெயரறியா
காதல் நாய்கள்
இருந்து வருகின்றன
இவ்வுலகில்

அப்படியொன்றாக மாற
அர்ப்பணித்து விடு
உனது வாழ்வை.


Wednesday, 1 July 2020

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

Listen you, enjoy your time,
You really don't have very long.
You were born just a moment ago,

-ஒரு ஜென் கவிதை

உன் அகத்தின் குரலைக் கேள்
வாழ்வின் கணங்களில் ஆனந்தமாய்த் திளைத்திடு
நெடுநாட்கள் இல்லை
சற்று முந்தைய ஓர் இமைக்கணத்தில் தான்
நீ பிறந்துள்ளாய்

Tuesday, 30 June 2020

எலெக்ட்ரானிக்ஸ்

எனக்கு ஜப்பான் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் உண்டு. அவர்கள் பணிப் பண்பாடு மிக்கவர்கள். எதையுமே மிக நேர்த்தியாகச் செய்வதில் வல்லவர்கள். எதையுமே மிக நேர்த்தியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். இவை நான் சிறுவனாயிருந்த போது இதழ்களில் இடம் பெறும் செய்திகளிலும் கட்டுரைகளிலும் வெளியாகும். ஜப்பான் மலைத்தொடர்கள் எரிமலைகளின் அழகிய புகைப்படங்கள் வெளியாகும். எலெக்ட்ரானிக்ஸ் அன்று முழுமையாக ஜப்பானியர்கள் கையில் இருந்தது. எதையுமே கையடக்கமாக விதை போல வெளிப்படுத்துவது ஜப்பானிய பாணி. 

நுட்பமான அச்சமூகம் உலகின் மீது பெரும் போரைத் திணித்த சக்திகளில் ஒன்றாகவும் ஆனதும் அதனால் பெரும் பாதிப்புக்கு ஆளானதும் மானுடத் துயரங்கள். 

தி.ஜானகிராமன் ஜப்பானின் பின்புலத்தில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ’’யாதும் ஊரே’’ என்று நினைவு. 

நான் விரும்பிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களாக எவை இருந்திருக்கின்றன என்று யோசித்துப் பார்க்கிறேன். 

1. ரேடியோ

சிறு வயதிலிருந்தே ரேடியோ மீது ஆர்வம் உண்டு. அதன் சிறிய உருவம். அதில் அசரீரி போல குரல் கேட்பது ஆகியவை இப்போதும் ஆச்சர்யத்தை உருவாக்குகிறது. நான் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. பார்த்து பல வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். 

அப்பா இப்போதும் ரேடியோ கேட்கிறார். காலை 6.45 மாநிலச் செய்திகள். இரவு 9 மணி ஆகாசவாணி ஆங்கிலச் செய்திகள். என் காதிலும் விழும். 

2. சயிண்டிஃபிக் கால்குலேட்டர்

பொறியியல் கல்லூரியில் படித்த போது சயிண்டிஃபிக் கால்குலேட்டர் பயன்படுத்துவோம். இப்போதும் என்னிடம் இருக்கிறது. கால்குலேட்டர் என்றால் அது சயிண்டிஃபிக் கால்குலேட்டர்தான். 

3. கிண்டில்

கிண்டில் ஓர் அற்புதம். இப்போது பல புத்தகங்களைக் கிண்டிலில் வாசிக்கிறேன். 

4. மடிக்கணிணி

டெஸ்க் டாப் கணிணிகள் அதிகமாகப் புழக்கத்திலிருந்த காலத்திலேயே நான் வாங்கியது மடிக்கணிணி. பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். கீ போர்டு வேலை செய்யாமல் போனது. எக்ஸ்டெர்னல் கீ போர்டு வாங்கினேன். அதுவும் சில வருடங்களுக்குப் பின்னால் பழுதானது. அதை மாற்றி விட்டு இன்னொரு விசைப்பலகையைப் பயன்படுத்தி வருகிறேன். 

ஸ்மார்ட்ஃபோன் உலகுக்குள் நான் வரவில்லை. 

ஒரு கண்டடைதல்

இன்று காலை ஃபிளாட் டி.வி பெரிய திரையைப் பார்த்து மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அதைப் பற்றிய எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அலைபேசியுடன் இணைக்கக்கூடிய ஒரு கையடக்கமான விலை குறைவான ஒரு புரொஜக்டர் இருக்குமானால் அதன் மூலம் செய்தித்தாளை இ-பேப்பராக வீட்டுச் சுவரில் எவ்வளவு தேவையோ அவ்வளவு பெரிதுபடுத்தி பார்க்க முடியுமே என்று யோசித்தேன். அலைபேசி மிகச் சிறியது. அதன் சிறிய திரை வாசிப்புக்கு உகந்தது இல்லை. கண்களுக்கும் கடினமான வேலை. ஆனால் சுவரில் இருப்பதை தேவையான ஃபாண்ட் சைஸில் அமைத்து வாசிக்க முடியும் என்று தோன்றியது. எனக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்குவதில் என்றுமே பெரிய ஆர்வம் இருந்ததில்லை. என் மனதில் உதித்தது சந்தையில் விற்பனையாக வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்குமே என்ற ஐயத்துடன் இணையத்தில் தேடினேன். மிக மிகக் குறைந்த விலையில் ஒரு மினி புரொஜக்டர் உலகெங்கும் விற்பனையாகிறது. அலைபேசியிலிருந்தோ கணிணியிலிருந்தோ மடிக் கணிணியிலிருந்தோ வீட்டுச்சுவரில் புரொஜக்ட் செய்ய முடியும். பகல் வெளிச்சத்திலியே தெளிவாகக் காணும் எல்.இ.டி வசதி உள்ளது. ஒரு சுவரொட்டியை வாசிப்பது போல ஒரு செய்தித்தாளை வாசித்து விடலாம். யுரேகா! யுரேகா! யுரேகா!

மக்கள் அரசு

இன்று ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரைச் சந்தித்தேன். அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரது தந்தை எனது நண்பர். அவரைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவர் வரும் வரை மருத்துவ மாணவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 

அவர் வீட்டில் ஒரு ஃபிளாட் டி.வி இருந்தது. எனக்குப் பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்கள் குறித்த அறிவு குறைவு. எலெக்ட்ரானிக் பொருட்கள் மீதான ஆர்வம் அதனினும் குறைவு. 

‘’இந்த டி.வி.யில் இன்டர்நெட் கனெக்ட் ஆகுமா?’’ நான் உரையாடலைத் தொடக்கினேன். 

‘’கனெக்ட் செய்ய முடியும்’’ மாணவர் சொன்னார்.

‘’டி.வி.க்குள் ஒரு சிம் கார்டு இருக்குமா?’’

இப்படி ஒரு கேள்வியை முதல் தடவை எதிர்கொள்வது அவருக்குத் திகைப்பாக இருந்தது. 

‘’வை - ஃபை ல கனெக்ட் பண்ணலாம்’’

‘’ஓ ! அப்படி ஒரு ஆப்ஷன் இருக்குல்ல. நல்ல விஷயம்’’

டீ-பாய் மீது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் இருந்தது. நான் எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு ஐயம்.

’’தம்பி! இந்த நியூஸ் பேப்பரை இ-பேப்பரா இந்த ஃபிளாட் டி.வி-ல படிக்க முடியுமா?’’

அவர் சற்று குழம்பினார். 

நான் செய்தித்தாளின் இணையபக்க முகவரியைக் காண்பித்தேன். 

‘’நியூஸ் ரீடர்ஸ் தன் முன்னால இருக்கற ஸ்கிரீன் - ல பாத்து படிக்கிறாங்கள்ல. அந்த டெக்னிக்.’’

நான் சொன்னது அவருக்கு நூதனமாக இருந்திருக்க வேண்டும்.

’’அப்படி படிக்கிறதுல என்ன யூஸ்?’’

‘’என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. காகிதப் பயன்பாட்டைக் கணிசமா குறைச்சிடலாம் இல்லையா?’’

’’எப்படி?’’

‘’பேப்பர் இண்டஸ்ட்ரீயோட அடிப்படையான மூலப்பொருளே மரக்கூழ்தான். பேப்பர் தயாரிக்க ஆயிரக்கணக்கான மரங்கள் வருடா வருடம் வெட்டப்படுது. காகிதப் பயன்பாட்டை ஹியூமானிட்டி எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்குதோ அவ்வளவுக்கு அவ்வளவு மரங்கள் காப்பாத்தப்படும்’’

அங்கே சுவரில் சில ரோமானிய அரசர்களின் பெயர்களையும் அவர்களுடைய காலங்களையும் எழுதி வைத்திருந்தார். 

‘’தம்பி! உங்களுக்கு வரலாறுல ஆர்வம் உண்டா?’’

‘’ஒரு நெட்ஃபிளிக்ஸ் தொடர் பாத்தன். அதுல இருந்து ஞாபகத்துக்காக எழுதி வைச்சன்.’’

என்னென்ன தொடர் பார்க்கிறார் என்று கேட்டேன். சில பெயர்களைச் சொன்னார். அதில் ஒன்று ஓட்டோமான் சாம்ராஜ்யம். 

‘’1453’’

வருடத்தைச் சொன்னதும் அவர் மிகவும் ஆர்வமானார். 

‘’கான்ஸ்டாண்டிநோபிள்’’

நான் கேட்டேன். ‘’Sick Man of Europe'' யார் தெரியுமா?

அவர் யோசித்துப் பார்த்தார். 

’’தெரியலையே’’

‘’துருக்கி’’

‘’அப்படியா?’’

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போதே நண்பர் வந்து விட்டார். எங்கள் உரையாடலில் நண்பரும் இணைந்து கொண்டார். நான் நண்பரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயத்தைத் தெரிவித்து விட்டு கிளம்ப ஆயத்தமானேன். 

‘’தம்பி! பிரபு ஒரு கிராமத்தில நிறைய மரக்கன்றுகள் நடற முயற்சியில இருக்காரு. ஒரு கிராமத்தை எடுத்து அதுல 25,000 மரக்கன்று நடறாரு.’’ அவர் மேலும் அவர் சொற்களில் விளக்கினார். மருத்துவ மாணவருக்கு அவர் சொன்னது முழுமையாகச் சென்று சேரவில்லை. நண்பர் என்னையே விளக்கச் சொன்னார்.

‘’அதாவது தம்பி! ‘’ என்று நான் ஆரம்பித்தேன். 

‘’நாம ஒரு சின்ன டீம் தம்பி. ஒரு ஏழு பேர்னு கணக்குக்கு வச்சுக்கங்க. நாங்க எல்லாரும் ஃபிரண்ட்ஸ். என்விரான்மெண்ட் சம்பந்தமா ஏதாச்சும் செய்யணும்னு பிரியப்பட்டு என்ன செய்யலாம்னு என்கிட்ட ஆலோசனை கேட்டாங்க. நான் யோசிச்சுப் பார்த்தேன். அதுல நாம கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. பொது வேலைல ஒருத்தரால என்ன செய்ய முடியுமோ அந்த வேலையைத் தான் நாம அவருக்குக் கொடுக்கணும். அதிகமா கொடுத்தா அவங்களால தொடர்ந்து செய்ய முடியுமாப் போயிடும். குவாண்டம் மெக்கானிக்ஸ்-ல குவாண்டம்னு சொல்றாங்கள்ல. அந்த மாதிரி சிறுசு. ஒரு கிராமத்துக்குப் போய் அந்த ஊரோட யங்க்ஸ்டர்ஸ்-க்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்கள்-ல ஆக்டிவிட்டிஸ் செய்ய சப்போர்ட் பண்றது எங்க இனிஷியல் பிளான். அப்புறம் அதை யோசிச்சு யோசிச்சு விரிவாக்குணோம். கிராமத்துல ஒவ்வொரு வீட்டுக்கும் நேராப் போய் உங்களுக்கு என்ன மரக்கன்னு வேணும்னு கேட்டு கணக்கெடுத்தோம். அந்த கிராமத்துல மொத்தம் 400 வீடு. எல்லா வீட்டையும் நேரா பாத்தோம். உங்களுக்குத் தேவையான மரக்கன்னு தர்ரோம். நட்டு வளத்துக்கங்கன்னு ரெக்வெஸ்ட் செஞ்சோம். நாங்க என்ன சொல்றோம்ங்றது விவசாயிகளுக்குப் புரிஞ்சுது. அவங்க வார்ம் ரிசப்ஷன் கொடுத்தாங்க. இப்ப கிராமத்துல இருக்கற வீடுகளுக்கு 18,000 மரக்கன்னு தர்ரோம். கிராமத்துல இருக்கற பொது இடங்கள்ல 7,000 மரக்கன்னு நடரோம். மொத்தம் 25,000. ஃபர்ஸ்ட் பிளான் மாதிரி ஒரு கிராமத்துல 100 மரக்கன்னு வீதம் முயற்சி செஞ்சிருப்போம்னா இந்த 25,000ங்ற நம்பரைத் தொட 250 கிராமங்கள்ல வேலை செஞ்சிருக்கணும். இதை ஒரு விதமான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்-னு சொல்லலாம். இல்லன்னா டார்கெட் மெடிசன்னு சொல்லலாம்.’’

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், டார்கெட் மெடிஸன் ஆகிய சொற்கள் அவர் மருத்துவ மாணவர் என்பதால் அவர் மனத்துக்கு நெருக்கமாக இருந்திருக்கக் கூடும். நான் புறப்படும் நேரம் வந்தது. 

‘’தம்பி! இந்தியாவுல எத்தனையோ பேரரசர்கள் இருந்திருக்காங்க. அவங்களை இன்னைக்கும் நாம அவங்க செஞ்ச மக்கள் நலப் பணிகளால தான் நாம நினைச்சுப் பார்க்கறோம். அசோகர் இந்தியா முழுக்க சாலையோரமா மரங்கள் நட்டார்னு பாடப்புத்தகத்துல இருக்கு. ஏன்னு நினைச்சுப் பாருங்க. அன்னைக்கு பெரிய அளவில டிரான்ஸ்போர்ட் ஃபெஸிலிட்டி கிடையாது. ஆனா ஒவ்வொரு கிராமமும் தேசத்தோட முழுமையான தொடர்புல இருக்கணும்னு சாலை ஓரங்கள்ல மரங்களை நட்டு நிழற்சாலையா ஆக்கனாரு. நடந்து போறவங்க ஒரு நாளைக்கு மேக்ஸிமம் 25 கி.மீ தூரம் நடக்க முடியுமா. அந்த நடைல அவங்க சோர்ந்துடக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல மரம் நட்டார். வட இந்தியாவுல இருக்கறவங்க ராமேஸ்வரத்துக்கும் தென் இந்தியாவுல இருக்கறவங்க காசிக்கும் போய்ட்டு வந்தாங்க. சோழர்கள் காலத்துல வீர நாராயண ஏரி வெட்டுனாங்க. நம்ம ஊர்ல இருந்து முக்கால் மணி நேர பைக் பயண தூரத்துல இருக்கு தம்பி. போய்ப் பாருங்க. ஊருக்குள்ள கடல் வந்துட்ட மாதிரி இருக்கும். இன்னைக்கும் சென்னை காரங்களுக்கு அந்த ஏரிதான் தண்ணீர் தருது. காகதீயப் பேரரசு வெட்டி வச்சிருக்க ஏரிகளைப் பாருங்க. அசந்துடுவீங்க.’’

அவர் இந்திய சாம்ராஜ்யங்களின் பெயர்களைக் கேட்பது அனேகமாக முதல் தடவையாக இருக்கக் கூடும். அவருக்கு இவை ஆச்சர்யம் அளித்தது. 

‘’பிரிட்டிஷ் நம்ம நாட்டுக்கு வர்ர வரைக்கும் உலகத்தோட ஜி.டி.பி.- ல நாம 50 சதவீதத்துக்கும் அதிகமா பங்களிப்பு கொடுத்திருக்கோம். தெரியுமா?’’

‘’என்ன உலகத்தோட மொத்த புரடக்‌ஷன் - ல இந்தியா பாதிக்குப் பாதியைக் கொடுத்திருக்கா”

‘’நான் சொல்றது எல்லாத்துக்குமே டாகுமெண்டல் எவிடெண்ஸ் இருக்கு தம்பி.’’ 

மருத்துவ மாணவரின் திகைப்பு நீங்கவில்லை.

‘’வெல்ஃபேர் ஸ்டேட்-ங்ற கருத்துக்கு ஐரோப்பா ஜனநாயகத்துக்கு வந்தப்றதாம் வந்து சேந்தாங்க’’

அவர் ஆமாம் என்பது போல பார்த்தார்.

‘’இந்தியாவுல 3000 வருஷமாவே அந்த கான்செப்ட் இருக்கு தம்பி’’

அவர் பல எண்ணங்களால் சூழப்பட்டிருந்தார். 

‘’சார்! இந்த வாரம் நீங்க ஒர்க் பண்ற கிராமத்துக்குப் போகும் போது எனக்கு கால் பண்ணுங்க. நானும் வர்ரேன்.’’