Sunday 25 March 2018

உடனும் தொலைவும்

உன் 
உடன் 
நடந்த போது
நீ நிலவைக் காட்டினாய்

அக்கணத்தின்
எதிர்பாராமையால்
திணறி
நிலைப்படுத்தினேன்

நீ
சொல்லிக் கொண்டே போனாய்
நதிக்கரையின் வசந்தங்களை
ஆறு பெருக்கெடுத்த நாட்களை
ஆலய நாகஸ்வர இசையை
கண்டாமணியின் நள்ளிரவு ஒலித்தல்களை
தேவாலயத்தின் திருமண விழாவை
அதிகாலைத் தொழுகை அழைப்பை

காட்சிப்படுத்திக் கொள்ளவோ
ஒலியாய் கேட்கவோ 
இயலாமல்

உன்னைப் பார்த்துக் கொண்டு
வந்தேன்
உடனும்
தொலைவும்