உன்
உடன்
நடந்த போது
நீ நிலவைக் காட்டினாய்
அக்கணத்தின்
எதிர்பாராமையால்
திணறி
நிலைப்படுத்தினேன்
நீ
சொல்லிக் கொண்டே போனாய்
நதிக்கரையின் வசந்தங்களை
ஆறு பெருக்கெடுத்த நாட்களை
ஆலய நாகஸ்வர இசையை
கண்டாமணியின் நள்ளிரவு ஒலித்தல்களை
தேவாலயத்தின் திருமண விழாவை
அதிகாலைத் தொழுகை அழைப்பை
காட்சிப்படுத்திக் கொள்ளவோ
ஒலியாய் கேட்கவோ
இயலாமல்
உன்னைப் பார்த்துக் கொண்டு
வந்தேன்
உடனும்
தொலைவும்