Friday 30 March 2018

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்



மாலை
வீட்டு வாசலில்
அவசர அவசரமாய் 
கதவைத் தட்டும்
சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்

முன்பெல்லாம்
வருடா வருடம்
ஊர் ஏலத்தில்
புளியம்பழத்துக்காக
மட்டும்
உலுக்கப்படுபவை
இப்போது
ஜே சி பி யால்
அடிக்கடி
பெயர்க்கப்பட்டு
விறகுகளாகின்றன
சாலை விரிவாக்கத்துக்காக

இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின் 
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்

நெடுஞ்சாலைப் புளியமரங்கள்