Friday 6 April 2018

நிலம் மேல்
நீர் தேங்கா நிலத்தில்
சிலம்பிக் கொண்டிருக்கின்றன
உவர் அலைகள்
பின்னர் ஆழ்அமைதி

பறவைகள் பறக்கும்
மேகங்கள்
ஏதுமிலா வானம்

சாக்கடை ஈரம்
எஞ்சும்
நிழலில்
எப்போதும் படுத்துக் கொள்கிறது
வீதி நாய் டோலி

வெயிலின் சுவாதீனத்தில்
இருக்கின்றன
ஆளற்ற வீதிகள்

சிமெண்ட் சுவர்களுக்குள்
உணரப்படுகிறது
கருணை இன்மையின்
வெப்பம்

இந்தக் கோடையின்
வேப்பந்தளிர்களுக்குத்தான்
எவ்வளவு மென்மை
எவ்வளவு மிருது

பூக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
எவ்வளவு நம்பிக்கை