நிலம் மேல்
நீர் தேங்கா நிலத்தில்
சிலம்பிக் கொண்டிருக்கின்றன
உவர் அலைகள்
பின்னர் ஆழ்அமைதி
பறவைகள் பறக்கும்
மேகங்கள்
ஏதுமிலா வானம்
சாக்கடை ஈரம்
எஞ்சும்
நிழலில்
எப்போதும் படுத்துக் கொள்கிறது
வீதி நாய் டோலி
வெயிலின் சுவாதீனத்தில்
இருக்கின்றன
ஆளற்ற வீதிகள்
சிமெண்ட் சுவர்களுக்குள்
உணரப்படுகிறது
கருணை இன்மையின்
வெப்பம்
இந்தக் கோடையின்
வேப்பந்தளிர்களுக்குத்தான்
எவ்வளவு மென்மை
எவ்வளவு மிருது
பூக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
எவ்வளவு நம்பிக்கை
நீர் தேங்கா நிலத்தில்
சிலம்பிக் கொண்டிருக்கின்றன
உவர் அலைகள்
பின்னர் ஆழ்அமைதி
பறவைகள் பறக்கும்
மேகங்கள்
ஏதுமிலா வானம்
சாக்கடை ஈரம்
எஞ்சும்
நிழலில்
எப்போதும் படுத்துக் கொள்கிறது
வீதி நாய் டோலி
வெயிலின் சுவாதீனத்தில்
இருக்கின்றன
ஆளற்ற வீதிகள்
சிமெண்ட் சுவர்களுக்குள்
உணரப்படுகிறது
கருணை இன்மையின்
வெப்பம்
இந்தக் கோடையின்
வேப்பந்தளிர்களுக்குத்தான்
எவ்வளவு மென்மை
எவ்வளவு மிருது
பூக்களுக்குத்தான்
எத்தனை சந்தோஷம்
எவ்வளவு நம்பிக்கை