Tuesday 5 June 2018

பெய்யும் மழை

எனது ஈரத்தை
உன்னிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன்னை நினைத்துக் கொள்வதாக
காணும் போது
கண்களின் நீர்த்திரையாக
ஒரு பிரியமான முத்தமாக
ஒரு எதிர்பார்ப்பாக
ஒரு விருப்பமாக
உன்னை விலகாது அணைத்திருக்கும் பொழுதுகளாக

பாலையில்
முடிவின்றி நீளும் சாலையின்
கரையில்
காத்திருக்கும்
பொழுதில்

அப் பொழுது உருவான மேகம்
பொழிந்த மழை
உருவாகி வந்தது
எனது அன்பின் சமுத்திரத்திலிருந்து