Monday 4 June 2018


இந்த இரவை விட அடர்த்தியாய் இருக்கிறது
எனது தனிமை
வானின் ஒவ்வொரு சுடர்மீனாலும் தீயிடப்படுகின்றன
எனது உணர்வுகள்
எனது காத்திருப்பின் பெருமூச்சு
சூறாவளியாய்
அண்ட சராசரங்களில் சுழல்கிறது
இந்த மெழுகைப் போல
உருகும்
எனது பிரியங்கள்
முழு உலகையும்
தழுவுகின்றன
எனது காதலின் அலைக்கரங்கள்