Tuesday 5 June 2018

வான் மலர்

ஒரு பெருமரத்தின் தளிர்க்கைகள்
வானத்தை
அணைத்துக் கொள்வது போல
உன்னை
அணைத்துக் கொள்கிறேன்

நீயன்றி யாருமற்ற
புணரியில்
முடிவற்று நீந்துகிறேன்

தீயென
எழுந்திருக்கும்
மலையின் உச்சியில்
ஒரு கூழாங்கல்லாய்
தவமிருக்கிறேன்

யுக யுகங்களாய்
விசும்பின் துளிக்காய்
காத்திருக்கும்
பாலை நிலத்தில்
பொழிகின்றது
உனது மேகங்களின் மழை

புதிதாய்ப் பிறந்த
இன்று அலர்ந்த மலரைப்
பார்த்து
மகிழ்கிறது
ஒரு குழந்தை