Monday 10 September 2018

ஒரு துயரம்
அடர்ந்து உருவம் கொள்ளும்
ஒவ்வொரு வினாடியிலும்
ஏறிக் கொண்டேயிருக்கிறது
பாரம்
இருள் நிறைந்த உணர்வுகள்
வெவ்வேறாய்
பெயர் ஏற்கின்றன
பற்பல காலமாய்
மட்கி அழிய காத்திருக்கின்றன
மாசின்மையின் துளி நீருக்காய்
எல்லைகள் அற்ற வானத்தில்