Friday 19 October 2018

வான் நதி

சூரிய மஞ்சள்
மரந்தளிர்ப் பச்சைகளில்
திலகமிடும்
அந்த மாலைப் பொழுதில்
போய்க் கொண்டேயிருக்கும்
ஒரு துறவி
மலையின் மேல்
விரிந்த கைகளுடன்
நின்றிருந்தான்

மகவாய்
அவனைத் தழுவியது
அன்னை மஞ்சள்

சட்டென
நதியாய் ஓடத் தொடங்கினான்

நிலமெங்கும்
ஒளிரும் அன்னை முகம் கண்டு
சந்தோஷம்
பிரதிபலிக்கும்
நதியாய்