Monday 22 October 2018

சவாரி வந்த ஊரில்
நிறுத்திவைத்து விட்டு
தெருமுக்கில்
டீ குடிக்கச் சென்ற
டிரைவர்
திரும்பி வருகையில்
நிழல்மரம்
பூக்களை உதிர்த்து
காருடன்
கொண்ட சிநேகம் பார்த்து
புன்னகைத்துக் கொண்டான்