Thursday 25 October 2018

காலைப் பொழுதில்
நீரால் நனையும் வாசல்கள்
கோலம் சூடிக்கொள்கின்றன
சிறுமிகள்
சம பாதியாய்
பிரித்த கூந்தல்
இரட்டை ஜடையாய்
மாறிக் கொண்டிருக்கிறது
அறியப் படாத உணர்வால்
குரலெழுப்புகின்றன
தவிட்டுக் குருவிகள்
குழந்தைகளின்
சீருடைத் தூய்மை
வானில் இருக்கிறது
இன்று
உதயசூரியன்
குழந்தை முகமென
பளபளத்தான்
இன்றும்