Wednesday 31 October 2018

எளியது கேட்கின்

ஒரு காலைப்பொழுதைப் போல மகத்துவம் மிக்கதாக
ஒரு கிராமத்துச் சாலையைப் போல தனித்திருப்பதாக
ஓர் ஆற்றங்கரை மரம் போல் மோனித்து
தடாகத்தின் தாமரை இலைகளுக்கு மேல்
மென்காற்றில்
உருண்டு உருண்டு ஒளிவிடும்
துளித் துளி நீர் போல்

இந்த வாழ்க்கைதான்

எத்தனை எளியது

எத்தனை அழகானது