Tuesday 1 January 2019

விளி

இன்று

தாள்கரம்
வான் நோக்கி உயர்த்தியிருக்கும்
பயிரின்
நுனி விரலில்
அருமணியென ஒளிவிடும்
அதிகாலைப் பனிக்கு

புகை அசையும்
கிராமத்துச் சாலையின்
ஓரத்தில் இருக்கும்
சிற்றோடையில்
தூய்மை கொண்டு
வீற்றிருக்கும்
அல்லி மலருக்கு

காலையின்
முதல் நடைப்பயிற்சியாளன்
நடக்கத் துவங்கும் போது
வழக்கமாகக்
கூவும்
கோழிக்கு

தூரத்தில் கேட்கும்
ஆலயமணிக்கு

சொல்வதற்கென

நம்மிடம் சொல்வதற்கென

இருப்பது தான் என்ன?