Monday 17 December 2018

பிசுபிசுக்கும்
இலைகள்
மூடிய தடாகத்தில்
பார்வையில் படாத மீன்கள்
சலம்புகின்றன
நீர் ஒலியாய்

அந்தரத்தில் தெறிக்கும்
துளிகள்
ஒளிக்கதிர் வாங்கி
அமர்ந்து
பின்னர் நகர்கின்றன
ஆழத்து மீன்களாய்