Sunday 3 February 2019

கிருஷ்ண முரளி - 2

உனது இருப்பு
சந்தனக் குளிர்ச்சி கொண்ட காற்றாக
ஆதுரம் அளிக்கிறது
வெண்மதியென
ஒளி வீசுகின்றன
உனது நினைவுகள்
மூழ்கிய நதியில்
விழி திறக்கும் போது
காணும் அலைவுகளாய்
உனது இசை
அலைக்கழிக்கிறது
நீ நிறைந்திருக்கும்
காற்றை
சுவாசிக்கும் தோறும்
வான் அகங்கள் நோக்கி
பறக்கிறது
என் அகப் பறவை