Thursday 7 February 2019

வேளூர் மருந்தீசர்

நெக்குருகும் உணர்வுகள்
பூரணமான சரணாகதிகள்
குடும்பத்துக்கான பிராத்தனைகள்
வலியின் துயரின் முன்வைப்புகள்
பொங்கி வழியும் கண்ணீர்
அப்பன் தவத்தில் மூழ்கியிருக்கிறான்
அம்மை அகம் கனிந்திருந்திருக்கிறாள்
சன்னிதியில்
கைக்குழந்தையை
ஏந்தி நின்றிருக்கிறாள்
ஓர் அன்னை