Thursday 7 February 2019

இன்று இரு கவிஞர்கள் சந்தித்துக் கொண்டோம்
எப்போதும் போல்
கவிதையைப் பற்றி பேசத் துவங்கினோம்
பின்னர்
எங்கள் கவிதைகளைப் பற்றி
கவிதை எழுதப்பட்ட நினைவுகள் பற்றி
சில கவிதைகள் வாசித்தோம்
சில கவிஞர்களை நினைவுகூர்ந்தோம்
கவிதையின் புதிய தடங்களை யூகிக்க முயன்றோம்
எது கவிதை என்ற
ஆதி விசாரணை
துவங்கி
நெடுநேரம் விவாதித்தி
முடிவுகள் ஏதும் இன்றி
மீண்டும் சந்திப்போம்
என்று
விடைபெற்றோம்