Thursday 21 March 2019

நீ
எல்லாவற்றையும்
மிகச் சரியாகவே
கையாள்வாய்
மனிதர்களை
இடங்களை
சூழ்நிலைகளை
அதில் ஏதும் ஐயமில்லை

ஒரு கணமும்
ஓயாமல்
எல்லாப்  பொழுதும்
நிறைந்து
இருப்பாய்
ஆர்வத்துடன்
மகிழ்ச்சியுடன்
அதிலும் ஐயமில்லை

தெளிவான
ஐயங்கள் ஏதுமற்ற
பரப்பிலிருந்து
விலகச் சொல்கிறாய்
அப்போது
உருவாகும் தவிப்பிற்கு
என்னவென்று
பெயரிடுவது?